Powered By Blogger

Wednesday, 27 January 2016

Dancing Soul (Michael Jackson)

கலிபோர்னியா: மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் ஆவி அலைவதால் அவரின் பங்களாவை வாங்க மக்கள் அஞ்சுகிறார்கள் என்று கூறப்படுகிறது. மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் பங்களா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இருக்கும் சான்டா பார்பரா கவுன்ட்டியின் நெவர்லேண்டில் உள்ளது. அவர் கடநத் 1987ம் ஆண்டு அந்த பங்களாவை வாங்கி அங்கு 15 ஆண்டுகளுக்கும் மேல் வசித்தார். 2 ஆயிரத்து 700 ஏக்கர் எஸ்டேட் மற்றும் பங்களா அடங்கிய நெவர்லேண்ட் ரான்ச் விற்பனைக்கு வந்துள்ளது.

மைக்கேல் ஜாக்சன் இறந்த பிறகு அவரது ஆவி நெவர்லேண்ட் ரான்ச் எஸ்டேட்டில் உலாவி வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதனால் அந்த எஸ்டேட்டை வாங்க வருபவர்கள் பயந்து சென்றுவிடுகிறார்கள் என்று கூறப்படுகிறது. நெவர்லேண்ட் ரான்ச் எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் 6 படுக்கையறைகள், 50 பேர் அமரக்கூடிய சினிமா ஹால், இரண்டு ஏரிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அந்த பங்களாவில் ஏதோ இசை கேட்பதாகவும் வதந்திகள் பரவுகின்றன...

Sunday, 24 January 2016

ஆவிகளின் உலகம்

அந்த பையனுக்கு பதினெட்டு வயதிருக்கும். முகத்தில் இன்னும் குழந்தைத்தனம் போகவில்லை. பூனை ரோமங்கள் போல அரும்பிய மீசை, தாடி, தனி அழகை கொடுத்தது. இன்னும் இரண்டு வருடம் போனால் நல்ல கம்பீர தோற்றத்தோடு அழகிய ஆண்மகனாக தென்படுவான் என்பதற்கு எல்லாவித அடையாளங்களும் அவனிடம் தெரிந்தது. ஆனால் இப்போது அவன் வைத்தகண் வாங்காமல் தரையை பார்த்துக்கொண்டிருந்தான் அடிக்கடி கை நகங்களை துடைப்பதும், அதில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா? என்று கூர்மையாக கவனிப்பதும் அவ்வப்போது நடந்தது.


அவனை அவனது தகப்பனார் என்னிடம் அழைத்து வந்திருந்தார். இவன் என் மகன் பனிரெண்டாவது வகுப்பு படித்தான். இப்போது ஒரு வருடமாக படிக்க முடியவில்லை படிக்க வேண்டுமென்று நினைத்தாலே படபடப்பாகி விடுகிறான். நீங்கள் தான் அவனை சரிபடுத்த வேண்டும் என்று சொன்னார். அவர் கூறியதற்கும், அவனது நடைமுறைக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை என்னால் உணர முடிந்தது அவனுக்கு இதுமட்டும் தான் பிரச்சனை வேறு எதுவும் இல்லை என்று யார் கூறினாலும் யாரும் நம்ப மாட்டார்கள் காரணம் பையனை பார்த்தவுடனேயே அவன் சராசரியாக இல்லை என்பதை சொல்லிவிடலாம்.


நான் அவன் தந்தையிடம் தனியாக பேச விரும்பினேன் அவனை வெளியே அனுப்பி விட்டு இப்போது சொல்லுங்கள் உங்கள் மகனுக்கு நிஜமாகவே என்ன பிரச்சினை என்று கேட்டேன். சிறிது நேரம் மெளனமாக இருந்த அவர் ஐயா இவன் எனக்கு ஒரே மகன் இவன் பிறந்து மூன்று வருடத்திலேயே என் மனைவி வேறொருவனோடு தொடர்பு வைத்து கொண்டு போய்விட்டாள் ஒரு குழந்தையை தகப்பன் வளர்ப்பதை விட தாய் வளர்ப்பது தான் சிறந்தது என்று நினைத்து அவளை எத்தனையோ முறை மானத்தை விட்டு வாழ வரும்படி அழைத்தேன் மறுத்துவிட்டாள்


என்னோடு மனைவியாக வாழ வரவில்லை என்றாலும் பரவாயில்லை இந்த குழந்தையை வைத்துக்கொள் அவனது தேவைக்கு என்னென்ன உதவிகள் வேண்டுமோ அத்தனையும் செய்கிறேன் தாயாக இருந்து, வளர்த்து ஆளாக்கு என்று கெஞ்சி கேட்டேன். அதற்கும் அவள் உன் உறவும் வேண்டாம், உன்னால் பிறந்த குழந்தையும் வேண்டாம் என்று மறுத்து விட்டாள். பெண்களில் நல்லவர்களும் உண்டு, கெட்டவர்களும் உண்டு ஆனால் அவளே தாயாக வரும்போது நல்லவளாக மட்டுமே இருப்பாள் என்று நான் நம்பினேன். அந்த நம்பிக்கையும் என் மனைவியை பொறுத்தவரை வீணானது. வெறும் உடல் வெறிக்காக குழந்தையை இழந்து, தன்மானத்தை இழந்து, குடும்பத்தையும் இழந்து எங்கோ கண்காணாத திசையில் வாழ்கிறாள்.


போனால் போகிறது வேறொரு திருமணம் செய்து கொள் என்று பெரியவர்கள் சொன்னார்கள். ஆனால் நான் அதற்கு இடம் கொடுக்கவில்லை யாருமே இல்லாத இந்த குழந்தை, நாளை தகப்பனும் இருந்தும் இல்லாமல் அனாதையாகி விடக்கூடாது அவனுக்காக என்னை தியாகம் செய்து வாழ்வேன் என்று இதுவரை வாழ்ந்து வருகிறேன் சென்ற வருடம் வரை என் மகனுக்கு எந்த சிக்கலும் இல்லை ஒரு சராசரியான பையன் எப்படி இருப்பானோ அப்படி இருந்தான்


நான் அரசாங்கத்தில் வேலை செய்கிறேன் அடிக்கடி இடமாற்றம் என்பது வரும் என்பதனால் என் மகனை ஹாஸ்டலில் சேர்த்திருந்தேன் மாதா மாதம் என்னை பார்க்க வந்துவிடுவான். அப்படி ஒரு மாதம் வந்தவன் பித்து பிடித்தவன் போல அமர்ந்து விட்டான் பள்ளிக்கூடம் போ என்றால் மறுத்தான் கட்டாயப்படுத்தி கொண்டு போய் விட்டால் கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டம் செய்கிறான். பள்ளியிலும் விடுதியிலும் அவனை வைத்துக்கொள்ள முடியாது என்று கூறி விட்டார்கள்


அவனுக்கு என்ன நேர்ந்தது என்று எனக்கு தெரியவில்லை. மனநல மருத்துவரிடம் அழைத்து போனேன் அவரும் சிகிச்சை செய்து சில மருந்துகள் கொடுத்தார் பெரியதாக முன்னேற்றம் தெரியவில்லை. இந்த நிலையில் என்னோடு அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு நண்பர் மூலம் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் என் மகனை வந்து பார்த்தார் அவனுக்காக ஜபம் செய்தார்.


உங்கள் மகனை மிக கொடிய ஆவி ஒன்று பிடித்திருக்கிறது அதை அவனிடமிருந்து நீக்குவதற்கு நாற்பது நாட்கள் உபவாசமிருந்து ஜெபம் செய்ய வேண்டும். அதற்கு முன்னால் அவன் கர்த்தருக்கு பிள்ளையாக ஒப்புவிக்க படவேண்டும் என்று கூறினார் எனக்கு அழுகையும், ஆத்திரமும் வந்தது. நானும், என் மகனும் என்ன பாவம் செய்தோம். சம்மந்தமே இல்லாத ஒரு ஆவி, என் மகனை பிடிக்கவேண்டிய அவசியம் என்ன? அவன் வாழ்வை கெடுக்க வேண்டிய காரணம் என்ன? என்றெல்லாம் தோன்றியது.


எது எப்படியானாலும் பரவாயில்லை. என் மகன் நல்ல நிலைக்கு வரவேண்டும் அதற்கு எந்த விலையும் கொடுக்க தயார் என்று அவனுக்கு கிறிஸ்தவ போதகர் சொன்னபடி ஞானஸ்தானம் செய்து வைத்தேன் அவரும் நாற்பது நாட்கள் என் மகனோடு  இருந்து தொடர்ந்து ஜெபம் செய்தார். அவர் ஜெபித்தது சரியோ, தவறோ எனக்கு தெரியாது. ஆனால் மனம் உருகும் வண்ணம் இறைவனிடம் அவர் வைத்த விண்ணப்பங்கள் கல்லையும் கரையச்செய்யும். அவர் ஜெபத்தை கேட்டு நான் எத்தனை முறையோ கதறி அழுதிருக்கிறேன்.


யார் அழுது ஜெபம் செய்து என்ன? விதியை மாற்றுவது அவ்வளவு சீக்கிரம் நடக்குமா என்ன? ஜெபம் செய்யும் காலம் முழுவதும் மாத்திரைகள் கூடாது என்று போதகர் சொன்னதனால் மருந்துகளை நிறுத்தி வைத்திருந்தேன் ஜெபம் துவங்கிய பாதி நாட்களிலேயே என் மகனின் நடவடிக்கை மிகவும் விபரீதமாக மாறிவிட்டது வீட்டு பொருட்கள் அனைத்தையும் போட்டு உடைத்தான். எல்லோரையும் மரியாதை இல்லாமல் பேசினான். அடிக்கவும் செய்தான் சில நேரங்களில் தற்கொலை முயற்சியில் கூட ஈடுபட ஆரம்பித்தான்.


இத்தனை நடந்தபிறகும் அந்த போதகர் இது அந்த ஆவியின் கடைசி கால சேட்டை. போகும் போது இப்படி எதையாவது செய்துவிட்டு போகும் என்று என்னை சமாதனப்படுத்தினார் நானும் பத்து நாட்கள் பொறுத்து பார்த்தேன் அதன்பிறகு என்னால் முடியவில்லை மருத்துவரிடம் அழைத்துச்சென்று மீண்டும் அவனுக்கு மருந்து கொடுக்க துவங்கி விட்டேன். இப்போது அவன் ஓரளவு சாந்தியாக இருக்கிறான்.


எனக்கு தெரிய வேண்டியது ஒரே ஒரு விஷயம் மட்டுமே என் மகனுக்கு வந்திருக்கும் பிரச்சனை மருத்துவர் கூறுகிறபடி மன நோயா? போதகர் சொன்னபடி ஆவியின் தொல்லையா? இரண்டில் எது பிரச்சனை என்று தெளிவாக தெரிந்தால் அந்த மார்க்கத்தை மட்டுமே கடைபிடித்து பையனை கரை சேர்க்கலாம் அல்லவா? என்று என்னிடம் கண்ணீர் மல்க கேட்டார்.


அவர் வேதனை எனக்கு புரிந்தது. ஆசை கனவுகளோடு வளர்க்கும் குழந்தை பைத்தியக்காரனாக கண்முன்னே நடமாடினால் எந்த தகப்பனால் சகித்துக்கொள்ள முடியும்? பிள்ளை இறந்து போய்விட்டால் கூட எனக்கு இறைவன் கொடுத்த பேறு இவ்வளவு தான் என்று மனதை தேற்றிக்கொள்ளலாம். ஆனால் உயிர் இருந்தும் எந்த உணர்சிகளுமே இல்லாத ஜடமாக பெற்ற மகனை பார்க்கும் துணிச்சல் யாருக்கு வரும்?


அந்த பையனை தனிமையில் அழைத்து பேசி பார்த்தேன். அவனிடமிருந்து பல கேள்விகளுக்கு மெளனமே பதிலாக வந்ததே தவிர உருப்படியான எந்த விபரத்தையும் பெற்றிட முடியவில்லை ஆனால் அவனது உடம்பில் உள்ள சில அறிகுறிகள் சாமுத்ரிகா சாஸ்திரத்தின் அடிப்படையில் மிக தீவிரமான மன நோய்க்கு ஆட்பட்டிருப்பதாக காட்டியதே தவிர ஆவி மற்றும் பேய்களின் பாதிப்பினால் அவனுக்கு இடையூறு இல்லை என்பதை தெளிவாக்கியது.


நாம் பல நேரங்களில் நமக்கு விடை கிடைக்காத, காரணம் புரியாத விஷயங்கள் பலவற்றிற்கு அமானுஷ்யமான சக்திகளே காரணமாக இருக்கும் என்ற முடிவிற்கு வந்துவிடுகிறோம். வந்தவுடனே இந்த காரியம் ஆவியின் பாதிப்பால் ஏற்பட்டது என்ற தவறுதலான பல செயல்களை செய்கிறோம். முதலில் ஒரு விஷயத்தை மிக நன்றாக கவனத்தில் கொள்ள வேண்டும் பேய்பிடித்தல், ஆவியின் தொல்லை என்பதெல்லாம் எல்லோருக்கும் வந்துவிடக் கூடியது அல்ல.


உதாரணமாக அனைவரையும் பேய் பிடித்து விடாது, பிடிக்கவும் முடியாது. ஆயிரம் மனிதர்கள் இருக்கிறார்கள் என்றால் அதில் ஒருவரையோ, இருவரையோ தான் ஆவிகளால் தொட முடியும். காரணம் ஆவிகளால் தொடப்படுவதற்கு சில விசேஷமான ரசாயன பொருட்கள் மனித உடலில் சுரக்க வேண்டும் எண்டோ பிளாசம் என்று ரசாயன பரிபாஷையில் சொல்லப்படுகிற சுக்கிர வீரியம் என்ற சக்தி யார் உடம்பில் குறைவாக இருக்கிறதோ அவர்களை ஆவிகள் தீண்டும். அதிகமாக இருப்பவர்களை தெய்வீக சக்திகள் நெருங்கும் இவைகள் இரண்டுமே அவ்வளவு சுலபமாக மனிதர்களுக்கு அமையாது.


சாமுத்ரிகா சாஸ்திரப்படி உடலில் ஏற்படுகிற அடையாளங்களை வைத்து எப்படி ஒரு மனிதனுக்கு ஆவிகளின் தொல்லை இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ள முடியுமோ அதைப் போலவே ஜாதகத்தில் ராகு, சந்திரன் செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஒரே வீட்டில் சேர்க்கை பெற்று இருந்தாலும், ஒன்றுக்கொன்று ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய திரிகோணங்களில் இருந்தாலோ மிக கண்டிப்பாக தீய ஆவிகளின் தொல்லை உண்டு என்று சொல்லிவிடலாம்.


நல்லவேளையாக இந்த பையனுக்கு அப்படி ஏதும் பிரச்சனைகள் இல்லை விடுதியிலோ, பள்ளியிலோ ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் அல்லது உறவினர்கள் மத்தியில் உருவான கசப்பான விமர்சனங்கள் இவனை இப்படி மாற்றியிருக்கலாம் என்னுடைய கணக்குப்படி உறவினர்களிடம் ஏதோ ஒருவகையில் இவன் மனவேதனையை சந்தித்திருக்க வேண்டும் அதன் காரணமாகவே இப்படி இருக்கலாம் என்று கருதி மனநல மருத்துவர் சொன்னபடி சிகிச்சையை தொடருங்கள். மிக விரைவில் கிரகங்கள் நல்ல நிலைக்கு வருகிறது. பையன் கண்டிப்பாக குணமடைவான். குணமடைந்த பிறகு, ஒருமுறை திருச்செந்தூர் முருகனை சென்று வழிபடுங்கள் என்று அனுப்பி வைத்தேன்.


இந்த விஷயத்தை இங்கே நான் கூறவந்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை. இனம்புரியாத நோய்கள் என்றவுடன் அவைகள் கண்டிப்பாக பேய், பிசாசுகளால் தான் வந்திருக்க வேண்டும் என்று நினைப்பது மிகவும் தவறு. அனைவரையும் ஆவிகள் பிடிக்கும் என்றால் ஒருமனிதனை கூட ஆரோக்கியமாக காணமுடியாது இவனுக்கு இன்ன காலத்தில் ஆவிகளால் தொல்லை ஏற்பட வேண்டும் என்ற விதி இருக்க வேண்டும். அப்போது தான் பேய்பிடிக்கும். அதுவரையில் சுடுகாட்டில் படுத்து கூட நிம்மதியாக உறங்கலாம்.

Saturday, 23 January 2016

LOVE U MOM

Before I start this real life incident I like to say * I LOVE MY MOM*
Share these post if u think your mom also loves you like this story:

This incident was still happening in south India where the people crowd was high it was not a rural place and not a city type place its a developing village we call it as town we don't know it was a rumour or real but we all believe in that we women always go to the market to buy household products near to the market their was a banyan tree. Woman's always leave their children near the banyan tree there was a swing where their children will play on the same time they will finish their shopping so they won't get disturb by the children while shopping. But it was a past now they can't leave their children there because they are afraid to leave theie children there. Some bad incident was happening in that place which makes them to scare all these days some people  were watched that incident directly and affected in fever in scare. Suddenly the swing moving automatically we all thought it was moving in air because it was a open space it was usual but later on we all understand it was not usual we can hear some sound like a child was laughing while it swings. Not only this incident makes us to scare when ever a man crossing the banyan tree they are hearing a voice like a child was crying with a word " why u left us alone " whenever a man cross the place they are hearing this same words with cry  " why u left us alone "  " why u left us alone ".

But when a woman cross the place the sound was like smiling with joy, all these incident makes them to scared and they avoid the place they stopped going to the market and started to purchase their needs which was away from 5km from the place but they are not worry to walk but they won't go that place. This incident was also published in newspaper also some collage students came for some research with some equipment to record the voice and to capture some photographs but result they get nothing so they leave the place but we strongly believe in that there was something and there was a talk about it was a ghost of a child who died 2 months back  her name was sadhana* .

All may think it was a ghost a danger or may b a strong negative power, but to me it was a angel my little Angel my own daughter sadhana* may be a rumour but im longing to see my  little princess, I'm longing to hear her sweet voice and her cute smile. My name is aradhana I'm a mother of my own little princess sadhana*, sadhana was my life no other hope in my life my hubby also left me alone affair with a lady in the next village so he went with her, sadhana is my world so I takes care so much with lots of love. she will always ask a question that " why dad left us alone" but I don't have any answer to her I ll give a smile as a return answer. one day I felt my total world was stopped I got a call from my daughter school that suddenly my daughter was felt dizzy and fell on the ground. so I rushed me to the school and take my daughter to the near by hospital the doctor was checking my daughter I went near by temple and started praying after that I went to hospital to c my daughter she was normal now I went to doctor for further details the word that doctor told to me makes me stun, my daughter was going to die in a month she was affected by a serious virus this single word makes my life to colourless. after that incident I didn't allow my daughter away any where  so whenever I went for shopping I hold her hand tightly she may feel hurt that I'm not allowing her to play I know she likes to play in the swing but what I can do but I was hurting inside still I remembered whenever I crossed the banyan tree she will look at the swing with love and sad. You won't understand my feeling  in case you are a mother. After all this this rumour incident  everyone scared but i  was standing near the banyan tree for my little princess my whole pray was wat I heard was not be a rumour it need to be true I'm longing for that but still I'm waiting for such magic in my life. Oh my little angel no problem how you looks, whatever u may be you just come to home with your mumma.

This incident happen really our team haunted chennai went to that place And talked to that mom aradahana with her permission we are sharing this beautiful love to all of you.. After hearing this incident I love my mom more than anything.. Share your option about your mom if you love comments yours opinion down

Wednesday, 20 January 2016

அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா!


Shocked back to life: The theory holds that when patients have a near death experience their quantum soul is released from the body and re-enters the cosmos, before returning when they are revived
கடவுளின் படைப்பில் கோடிக் கணக்கில் ஆச்சரியகரமான விஷயங்கள் உள்ளன.அவற்றில் மனிதனின் பிரக்ஞையும் ஒன்று.
பிரக்ஞை மனிதனின் உடலில் எங்கு உள்ளது? மூளையிலா, அல்லது வேறு இடத்திலா?
மூளையைத் துளைத்துக் கொண்டு துப்பாக்கிக் குண்டுகள் போன பல நிகழ்வுகளில் அதைத் தாங்கி மனிதனின் மூளை பிரக்ஞையைக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் அதே சமயத்தில் தலை ஒரு சாதாரண மோதலுக்கு உள்ளாகி அதனால் பல நிமிடங்கள் அல்லது பல நாட்கள் கூட பிரக்ஞை இழந்த ஏராளமான சம்பவங்களையும் பார்க்கிறோம். உணர்வு திரும்பாமல் பல மாதங்கள் கோமாவில் இருக்கும் ஒருவரின் உடலில் உயிர் இருக்கிறது. ஆனால் பிரக்ஞை இல்லை!பிரக்ஞை இருந்து ஆனால் உடல் அங்கங்கள் பாரிச வாயுவால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகள் இயக்கம் இன்றி இருக்கும் அனேகரையும் பார்க்க முடிகிறது.இந்த பிரக்ஞை தான் எவ்வளவு விசித்திரம்! இதை ஆராயும் இன்றைய முன்னணி விஞ்ஞானிகளுள் ஒருவர் ஸ்டூவர்ட் ஹாமராஃப்
ஸ்டூவர்ட் ஹாமராஃப்

அரிசோனா பல்கலைக் கழகத்தில் உணர்வகற்றலியல் எனப்படும்
அனஸ்தீசியாலஜியிலும் உளவியலிலும் பேராசிரியராக இருபத்தைந்து
வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றி ஓய்வுபெற்று, பின்னர் அங்கேயே சிறப்புப்
பேராசிரியராக அவர் பணியாற்றி வருகிறார். 1996ஆம் ஆண்டிலிருந்து அரிசோனா
பல்கலைக்கழகத்தின் பிரக்ஞை பற்றிய ஆய்வு மையத்தின் இயக்குநராக இருக்கிறார்.

க்வாண்டம் கான்ஸியஸ்னெஸ்
ஆன்மா இருப்பதை என்னால் நிரூபிக்க முடியும் என்று அவர் கூறியது அறிவியல் உலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரிட்டிஷ் இயற்பியல் நிபுணரான ரோஜர் பென்ரோஸுடன் இணைந்து க்வாண்டம் பிரக்ஞை என்ற புதிய கொள்கையை அவர் அறிவியல் உலகின் முன் வைத்துள்ளார்
மூளை செல்களுக்குள் மைக்ரோட்யூபூல் என்ற அமைப்பு உள்ளது. இந்த மைக்ரோட்யூபூலில் ஆன்மா உறைந்திருக்கிறது. செத்துப் பிழைத்தவர்களின் அனுபவங்களை ஆராய்ந்து பார்க்கையில் உயிர் உடலை விட்டு நீங்கும் போது பிரக்ஞையானது இந்த மைக்ரோட்யூபில்லிருந்து நீங்கி பிரபஞ்ச பிரக்ஞையுடன் இணைகிறது.
உயிர் மீண்டும் உடலுடன் இணைகையில் இந்த பிரக்ஞை மைக்ரோட்யூபிலில் வந்து இணைகிறது.

அழியாத ஆன்மா இருப்பதை நிரூபிக்க முடியும்
மூளையை ஒரு பயாலஜிகல் கம்ப்யூட்டராக அதாவது உயிரியல் கணினியாகக் கொண்டு ஆன்மாவை நிரூபித்து விட முடியும் என்கிறார் ஹாமராஃப்.
ஒரு பில்லியன் என்பது நூறு கோடியைக் குறிக்கும் எண். இப்படி நூறு பில்லியன் நியூரான்கள் ஒவ்வொரு மனித மூளையிலும் இருக்கிறது. இந்த நியூரான்கள் அனைத்து தகவலையும் ஏந்திச் செல்லும் திறன் படைத்தவை.இதனுள் இருக்கும் மைக்ரோட்யூபூல் தான் பிரக்ஞைக்கும் ஆன்மாவுக்கும் இருப்பிடம் என்கிறார் ஹாமராஃப்.
இந்த ஆன்மா உடல் நீங்கினாலும் பிரபஞ்ச பிரக்ஞையுடன் இணைந்து விடுவதாலேயே ஆன்மாவுக்கும் மரணம் இல்லை என்று அவர் கூறுகிறார்.
கீதையில் (இரண்டாம் அத்தியாயம் இருபதாம் ஸ்லோகம்) வரும் அற்புதமான ஸ்லோகம் இது தான்:
ந ஜாயதே ம்ரியதே வா கதாசித்
நாயம் பூத்வா பவிதா வா ந பூயா I
அதோ நித்ய ஸாஸ்வதோயம் புராணோ
ந ஹந்யதே  ஹந்யமாநே சரீரே II
இதன் பொருள் : இந்த ஆத்மா எப்போதும் பிறப்பதுமில்லை; இறப்பதுமில்லை.ஒரு சமயம் இருந்து மறுசமயம் இல்லை என்பதுமில்லை. இது  பிறப்பற்றது. என்றுமுள்ளது. நிலையானது.பழமையானது.சரீரம் கொல்லப்படும்பொழுதும் இது கொல்லப்படுவதில்லை. இந்த ஆத்மாவை ஆயுதங்கள் வெட்டுவதில்லை (நைநம் சிந்தந்தி சஸ்த்ராணி) நெருப்பு எரிப்பதில்லை (நைநம் தஹதி பாவக:) தண்ணீர் நனைப்பதில்லை (ந சைநன்ம் க்லேதயந்த்யாபோ) காற்று உலர்த்துவதும் இல்லை (ந சோஷயதி மாருத:) (2ம் அத்தியாயம் 21ம் ஸ்லோகம்)

“ இதயம் துடிப்பதை நிறுத்தட்டும்; ரத்தம் ஓடுவதை நிறுத்தட்டும்; அப்போது மைக்ரோட்யூபூல் தனது க்வாண்டம் தன்மையை இழக்கிறது. ஆனால் மைக்ரோட்யூபூலின் உள்ளுக்குள் இருக்கும் க்வாண்டம் தகவலானது அழிவதில்லை” என்று அவர் தனது கொள்கையை அமெரிக்க ஸயின்ஸ் சேனலில் த்ரூ தி வோர்ம்ஹோல் (Through the wormhole) என்ற டாகுமெண்டரி மூலமாக விளக்கி அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளார்.


யோக வாசிஷ்டம் கூறும் உண்மை




ப்ரக்ஞை பற்றிய ரகசியத்தையும் ஆன்மா அழியாது என்ற உண்மையையும் அறிவியல் பூர்வமாக விளக்கியுள்ள இவரை பிரபல ஆன்மீகவாதியான தீபக் சோப்ரா நேரடி பேட்டி கண்டார். அந்த ஒளிபரப்பு அனைவரையும் கவர்ந்தது.
தீபக் சோப்ரா தனது பேட்டியில் ஹாமராஃபை நோக்கி, “ யோக வாசிஷ்டம் என்ற முக்கியமான பழம்பெரும் வேதாந்த நூல்  ஒன்று இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அதில் ராமர் தனது குருவான வசிஷ்டரின் காலை பாரதத்தின் தொன்று தொட்டு வரும் சம்பிரதாயப்படி தொட்டு வணங்குகிறார். வசிஷ்டரோ.” நில். அப்படிச் செய்யாதே. நீ கடவுள். இப்படி ஏன் செய்கிறாய்! என்கிறார். அதற்கு ராமர்.” நான் மறந்து விட்டேன். நீங்கள் தான் நான் கடவுள் என்பதை எனக்கு ஞாபகப்படுத்த வேண்டும்” என்று பதில் கூறுகிறார். பின்னர் தனது முதல் பாடத்தை ராமருக்கு வசிஷ்டர் இப்படிப் போதிக்கிறார்: “உலகத்தில் நீ இல்லை; உலகம் உன்னுள் இருக்கிறது. நீ உடலில் இல்லை. உடல் தான் உன்னுள் இருக்கிறது. நீ மனத்தில் கூட இல்லை மனம் தான் உன்னுள் இருக்கிறது. நீ உன் பிரக்ஞையுள் நுழைகையில்  மனம், உடல் மற்றும் உலகத்தை நீ உருவாக்குகிறாய்” என்று கூறி விட்டு ஹாம்ராஃபை நோக்கி தீபக் சோப்ரா, “ நீங்கள் கூறும் கொள்கை இதையொட்டி இருக்கிறதே!” என்றார்.
அதற்கு ஹாமராஃப், “ ஆஹா! அது மிக அருமை, அற்புதமான வரிகள். பீட்டில்ஸ் “யுவர் இன்சைட் இஸ் அவுட் அண்ட் யுவர் அவுட்சைட் இஸ் இன்’ (உனது அகம் வெளியில் உள்ளது; உனது புறம் அகத்தில் உள்ளது)என்று கூறுவது போல உள்ளது” என்று பதில் கூறினார்.
“பிரக்ஞையைப் பற்றி நான் கூறி இருப்பது ஐஸ்பெர்க்கின் ஒரு முனை தான்; அதாவது பிரம்மாண்டமான கடலில் ஒரு துளி தான்”, என்று கூறியுள்ள ஹாமராஃப் இது பற்றி இன்னும் விரிவாக ஆராய்ந்தால் இன்னும் ஏராளமான உண்மகைகளை அறிய முடியும் என்கிறார்.
பிரக்ஞை பற்றிய தத்துவத்திற்கும் ஆன்மாவுக்கும் அறிவியல் அளிக்கும் அங்கீகாரம் ஆன்மீகவாதிகளுக்கு ஒரு பெரும் சந்தோஷத்தை உலகெங்கும் ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோர் வியப்புடன் கூடிய சந்தோஷத்தில் திளைக்க வழி வகுத்து விட்டது! வேதாந்தத்தைப் போதிக்கும் பாரதமோ தன் ஆழ்ந்த ஆன்மீகக் கொள்கையில் இன்று தலை நிமிர்ந்து கம்பீரமாக நிற்கிறது,!




Tuesday, 19 January 2016

True Story


Na Mukilan fulla tamizh medium la padichitu naakula suthama english varadha pacha tamizhan (Ipola idhu fashion
achi english varalana pacha tamizhan kalar ah thuki solrom) irundhalum "IT" company la job poganum nu oru asa
azhagana ponugala pakka matum ila area la oru respect kedaikum nu ta ella saria panalum namba vaya toranda udanae
"CALL YOU LATER" nu kural (English la na kathukita mudal vartha "CALL YOU LATER"). yaru senja puniyamo enaku oru "IT" company
la job kedachidu *Company name sona problem varum so inga solala* apadi ipadi 6 masam pochi permanent ana enakunu oru
girlfriend enaku ena problem vandalum mudala nikura en macha (natpu) ana kalyanam achi avanuku. Projects mudira time tidir tidirnu
employess ah velaya vitu thukunanga enga seat epo
kizhium nu teriyama muzhichitu irundom maru naal elarukum office leave solitanga en nu parta enga MD sethutaru nu enga vendudhal veen pola
nu elarum santhosam patom company vera orutaruku kai marichi epaum pola office run achi. Enoda seat and en friend oda seatum
pazhaya MD room ku opposite la ta irukum but anga edo vidhyasama iruka mari edo terium apo apo. Edhartama thirumbi pakkum
bodu anga yaro ukanjitu iruka mari la terium enga pazhaya MD oda avvi inga ta suthudu nu ellarum pesikitanga adhu new MD ku
teriya vara udanae ellarukum one day leave vitaru marunaal vandu partha paint colour la mathi thayathu la kathi parta "IT"
company mari ila "chandramughi" Room mari iruku (En mapla paint adhichi edha vena maraikalam peia maraika mudiuma). Epaum
enga old MD 12 ku la correct ah screen ah close panitu smoke panuvaru nanga lunch pora time adhu. Ipo avar ila orunal en macha oda
wife lunch kathi tara la na hotel ku pora 1'o clock ku neenga poda solitan. so naanga poitom lunch mudichitu mela vandhu
partha avan shutdown panithu poita call pana pick panla. Marunaal office ku vandha enda nethu solama kolama odhitanu
ketha avan ena sonana."Macha na sona namba matha nethu ne poita la sapida adhuku aparam na vazhkam pola system la vela pakama
cards play panitu irundha apo correct ah oru 12:05, irukum namba pazhaya MD room screen thana mudikichi konjam neram kazhichi
partha ulla irundhu orae cigarate smell da ena da nu ethi partha ulla orae poga da yaro smoke pana mari udana system ah off
panithu oditha nu sona". Nanga shock ana mari avana partom udanae ellarum ona sirichitu irundom poga vandhucha ivaru parthara
poda nu solitu aparam en da inaiku office vandha kethom "Veetla en pondati pei oda indha pei paravala nu vandhuta da nu sona"
elarum sirichitu anga irundu kelambunom anaiku vazhagam pola mani oru 12 achi udanae en frnd veetuku pora nu kelambuna
udanae elarum kalaika arambichitanga "Anaila irundu namba gopaluu 4(Naalu) 4:30 (Naalarai)ku la escape agiduvana". But
na mathum sandekam patha ivan ipadi la panamatanae nu then ellarum lunch ku poitanga na wait pani partha apo na partha
incident idhu varaikum yaaru life laum feel kuda pani iruka mathinga>>>>>

"HAUNTED CHENNAI" waiting for your feedback to continue the story.

Wednesday, 13 January 2016

Karikattu Kuppam

Karikattu Kuppam is a scenic stretch on the East Coast Road, the 2004 tsunami caused many deaths here. The place is said to be haunted by an old man and two children who died during this tragedy. This place is completely deserted and even local residents fear to go here. All the residents here were relocated after the Tsunami, the town is dilapidated but still has a school, temple and many houses, with no human beings around, beings from the other realm have taken to this place as their own. The shadow of a ghost is seen walking around, the ghost children wail from deserted lands, apparitions are seen everywhere.

Valmiki Nagar Haunted House

This house is haunted by the ghost of a woman who committed suicide 10 years ago, even though her father owns the house, no one dares to live there in fear of the woman who haunts it. The front door which is locked, opens and closes when people look at the house, mobile phone signals stop just when people walk by the house. There have been many witnesses who heard the girl crying, screaming and other mysterious sounds from the empty house. Every night at 2 am, doors in the house slam shut. The front gate automatically opens at night, inviting those who cross it to come and share the company of the dead. Shivers.